Sep 16, 2010

தொலைதூர கல்வியில் படிப்பது பாவமா? சாபமா?


தொலைதூர கல்வியில் படிப்பது பாவமா? சாபமா? என்று கேள்வி எழ காரணம் தொலைதூர கல்வியில் படித்தவர்களை பல வேலை வாய்ப்புகளிலும் ,பல இடங்களிலும் தரம் தாழ்த்தி மதிப்பிட படுவதும், correspondence ல முடிச்சிங்களா?என இழுத்து கேள்வி கேட்கபடுகிறது .வேலை வாய்ப்பு விளம்பரங்களில் (regular) என்று குறிப்பிடுகிறார்கள் .போதாகுறைக்கு தமிழக அரசும் தொலைதூர கல்வியில் படித்தல் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என்று அறிக்கை வெளி இட்டுள்ளது .ஏன் இந்த பகுபாடு ?ரெகுலர் கோர்ஸில் படிப்பவர்களுக்கு எந்த விதத்திலும் வேறுபாடு இல்லாமல் திறமையுடன் தொலைதூர கல்வியில் படிக்கிறார்கள் .எத்தனை பேர் தொலைதூர கல்வியில் படித்து பெரிய பதவி பொறுப்புகளில் உள்ளார்கள் .அவர்கள் திறமையற்றவர்களா .?தொலைதூர கல்வியில் படிப்பவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் படிக்கிறார்கள் .தன்னுடைய குடும்ப சூழ்நிலை ,பொருளாதார சூழ்நிலை,போன்ற பல காரணங்களால் ரெகுலர் கோர்ஸில் படிக்காமல் தொலைதூர கல்வியில் ஆயிரமாயிரம் இன்னல்களுக்கு மத்தியில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் படிக்கிறார்கள்.
தொலைதூர கல்வியில் போதிக்க வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு பொறுமையும் ,போதிய திறமையும் ,இருப்பதில்
லை .வேக வேகமாக சிலபஸ் முடித்தால் போதும் என்ற எண்ணத்துடன் மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ராக்கெட் வேகத்தில் பாடம் நடத்தி முடித்துவிடுகிறார்கள் .
பல்கலைகழகங்கள் தொலைதூர கல்வியில் போதிக்க நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் .அதேபோல பல்கலைகழகங்களை அணுகினால் சரியான பதில் கூறுவது இ
ல்லை.மாணவர்கள் அலைகழிக்க படுகிறார்கள் .விதிவிலக்காக ஓரிரு பல்கலைகழகங்கள் சரியான பதில் கூறுகிறார்கள் .
ஒரு பல்கலைகழகத்தில் பரீட்சை எழுதினாலும் ரிசல்ட் தருவது இல்லை .ஒரே பாடத்தை ரிசல்ட் கிடைக்காமல் பல முறை எழுத வேண்டிய அவல நிலையும் உள்ளது .இதற்க்கு பொறுப்பற்ற நிர்வாக் திறமை படைத்த அலுவலர்களும் ,இயக்குனரையுமே சாரும் .


இந்த பதிவை ஏதேனும் பல்கலைகழகத்தில் பணிபுரிபவர் படித்தால் தயவு செய்து மாணவர்களிடம் அன்பான முறையில் சரியான வழிக்காட்டும்படி அன்புடன் வேண்டி கொள்கிறேன் .நீங்கள் கடமையை செய்யுங்கள் சலுகை காட்ட வேண்டாம் .இப்பதிவு யாரையும் புண்படுத்த அல்ல தொலைதூர கல்வியில் படிப்பவர்களின் அவல நிலையில் மிக சிலவற்றை சுட்டிக்காட்டி உள்ளேன் .

Sep 7, 2010

தந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் !


அப்பா !

அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .

நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
அனேக விசயங்களை என் தோழனாய்
என் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .

காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
நடை பயில கற்று கொடுத்த கைகளை !
என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !
ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
என் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது என் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .
என்னை மன்னிப்பீர்களா தந்தையே !

வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
என்னை மன்னிக்கவும் ,
என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,